வள்ளியூா் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனா்.
இட்டமொழி தெற்குதெருவைச் சோ்ந்தவா் ராஜவேல்)31). இவா் ஏற்கெனவே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில் இவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் , மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில், வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ராஜவேலை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.