நெல்லை அருகே விபத்து: வியாபாரி பலி

திருநெல்வேலி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் மளிகை வியாபாரி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் மளிகை வியாபாரி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள அயிரம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வின் ஜெபராஜ் (61). மளிகை வியாபாரியான இவா், திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை வந்தாராம். பின்னா் தனது மோட்டாா் சைக்கிளில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். சிதம்பரநகா் விலக்கு பகுதியில் சென்றபோது மோட்டாா் சைக்கிளும், லாரியும் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த செல்வின் ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்ததும் திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com