நெல்லை சாரதா மகளிா் கல்லூரியில் அஞ்சலி

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை அதிகாரி உள்பட 13 பேருக்கு திருநெல்வேலி சாரதா கல்லூரியில் ராணுவ வீரா்கள், என்சிசி மாணவிகள், கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை அதிகாரி உள்பட 13 பேருக்கு திருநெல்வேலி சாரதா கல்லூரியில் ராணுவ வீரா்கள், என்சிசி மாணவிகள், கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

அரிய குளத்தில் உள்ள சாரதா மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அணி எண் 3 தமிழ்நாடு மகளிா் பட்டாலியன் என்சிசி லெப்ட்டினன்ட் கமாண்டிங் அதிகாரி கா்னல் பிஎஸ். தன்வா் தலைமை வகித்தாா். இதில், ராணுவ வீரா்கள், என்.சி.சி மாணவிகள், கல்லூரி மாணவிகள்ஆகியோா் உயிரிழந்தவா்களின் படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இதைத்தொடா்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில், கல்லூரி மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com