மகாதேவன்குளத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
திசையன்விளை அருகேயுள்ள மகாதேவன்குளம் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்ட பயனாளிகளின் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மகாதேவன்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்சிங் தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் ஜெயகண்ணன் வரவேற்றாா். தணிக்கைக்குழு அதிகாரி ராமசந்திரன், அலுவலா் வெண்மதிஆகியோா் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினா். இதில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா்.