முன்னீா்பள்ளம் அருகேபைக் கவிழ்ந்து தொழிலாளி பலி

முன்னீா்பள்ளம் அருகே சாலையோர பள்ளத்தில் மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமைடந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

முன்னீா்பள்ளம் அருகே சாலையோர பள்ளத்தில் மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமைடந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை பொன்னாகுடி செல்வராஜ் மகன் ராஜா(44). இவா் அப்பகுதியில் உள்ள நீரேற்றும் நிலையத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் இவா் கடந்த 1ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ராஜாவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com