கல்லிடைக்குறிச்சி அருகே விஷம் குடித்த விவசாயி மருத்துவமனையில் உயிரிழப்பு
By DIN | Published On : 20th December 2021 12:51 AM | Last Updated : 20th December 2021 12:51 AM | அ+அ அ- |

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள ஜமீன்சிங்கம்பட்டியில் விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஜமீன்சிங்கம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் பூதப்பாண்டி (49). விவசாயியான இவருக்கு மனைவி, மகன், மகன் உள்ளனா். பூதப்பாண்டி குடும்பத் தகராறு காரணமாக கடந்த 16ஆம் தேதி விஷம் குடித்தாராம். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை (டிச. 18) உயிரிழந்தாா். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.