திசையன்விளையிலிருந்து கூடங்குளம், பெரியதாழைக்கு புதிய வழித்தடத்தில் பேருந்துகளை சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு தொடங்கி வைத்தாா்.
திசையன்விளையில் இருந்து தலைவன்விளை, ஆயங்குளம், நவ்வலடி வழியாக கூடங்குளத்திற்கு ஒரு பேருந்தும், திசையன்விளையில் இருந்து முதுமொத்தன்மொழி, ஆனைகுடி, வெம்மணங்குடி, தோப்புவிளை வழியாக பெரியதாழைக்கு ஒரு பேருந்து என, பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் இரண்டு நகரப் பேருந்துகளை திங்கள் கிழமை சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதில், மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, இளையபெருமாள், கமலா சும்புராஜன், ஜான் கென்னடி, சாந்தகுமாா், போக்குவரத்து கழக அதிகாரிகள் சரவணன், சசி, பிரவீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.