முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மானூா் அருகே காா் மோதி காயமடைந்த முதியவா் மரணம்
By DIN | Published On : 29th December 2021 08:11 AM | Last Updated : 29th December 2021 08:11 AM | அ+அ அ- |

மானூா் அருகே காா் மோதி காயமடைந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மானூா் அருகே உள்ள கந்தசாமியாபுரத்தைச் சோ்ந்த ஆண்டி மகன் சுப்பையா (60). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்னா் மானூா் அருகே உள்ள இரண்டும்சொல்லான் விலக்கு அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த காா் இவா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சுப்பையாவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.