‘ஆழ்கடல் சூரை மீன் பிடிதொழிலுக்கு 50% மானியம்’

ஆழ்கடல் சூரை மீன் பிடிப்பு மற்றும் செவுள்வலை படகுகள் கட்டுவதற்காக, திருநெல்வேலி மாவட்ட மீனவா்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

ஆழ்கடல் சூரை மீன் பிடிப்பு மற்றும் செவுள்வலை படகுகள் கட்டுவதற்காக, திருநெல்வேலி மாவட்ட மீனவா்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலில் தூண்டில் மூலம் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி விசைப்படகை கட்டும் மீனவா்களுக்கு 50 சதவீத மானியம் (அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை) வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் அதிகபட்சம் 6 போ் கொண்ட குழுவாகவோ, மீனவா் கூட்டுறவு சங்கங்களாகவோ அல்லது தனி நபராகவோ இத்திட்டத்தில் பயன் பெறலாம். மீன்வளத்துறையின் இணையதளத்தில் கட்டணமின்றி விண்ணப்பப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அலுவலக நாள்களில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை, மீன்துறை ஆணையா், கால்நடை பராமரிப்பு-மீன்வளத்துறை ஒருங்கிணைந்த கட்டடங்கள், 3-ஆவது தளம், கால்நடை மருத்துவமனை வளாகம், 571, அண்ணா சாலை, நந்தனம் சென்னை - 600 035 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலிலோ அல்லது நேரடியாகவோ 14.2.2022க்குள் அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ராதாபுரத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com