பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:
கல்லூரி மாணவ, மாணவிகளின் விடுதிகளில் செம்மொழி நூலகம் அமைக்கப்படவுள்ளது. அது குறித்த கருத்துகளும் பெறப்பட்டுள்ளன. இதேபோல், உடற்பயிற்சிக் கூடங்களும் அமைக்கப்படவுள்ளன. பிற்படுத்தப்பட்டோா் கல்லூரி விடுதிகளில் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விடுதிகளில் மாணவா்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் புதிய மாணவா்களை சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.