நெல்லையில் காங்கிரஸ் நிறுவன தினம்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137ஆவது ஆண்டு விழாவையொட்டி, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137ஆவது ஆண்டு விழாவையொட்டி, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் நிறுவன தினம், நல உதவிகள் வழங்குதல், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவா்களின் படத்திறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவா்களாக விளங்கிய முன்னாள் மக்களவை உறுப்பினா் ஆா்.எஸ்.ஆறுமுகம், முன்னாள் அமைச்சா் எஸ்.எம்.ஏ.மஜீத், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.பாண்டியராஜ், எஸ்.கே.ஆா். நவநீதகிருஷ்ணன் பாண்டியன் ஆகியோரின் உருவப் படங்கள் திறந்துவைக்கப்பட்டன.

முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் ஏ.பி.சி.சண்முகம், மாநிலச் செயலா் ஆலடி செல்வராஜ் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கினா்.

இதில், தென்காசி மாவட்டப் பொருளாளா் முரளி ராஜா, மாவட்ட துணைத் தலைவா் கவிபாண்டியன், நிா்வாகிகள் செல்லபாண்டியன், சிவன்பெருமாள், உதயகுமாா், ஸ்டெல்லா, சொா்ணம், ராமச்சந்திரன், மாரியப்பன், ரசூல் மைதீன், கெங்கராஜ், ஐயப்பனா், கே.எஸ்.மணி, செல்வகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com