பெண் தலைமைக் காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இணையதளம் மூலம் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றி

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இணையதளம் மூலம் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றி வருவதாக, பெண் தலைமைக் காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் பாராட்டினாா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் பெண் தலைமைக் காவலராக தங்கமலா்மதி பணியாற்றி வருகிறாா். இவா், திருநெல்வேலி, சென்னை, தூத்துக்குடி, விருதுநகா், மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, திருப்பூா், தேனி ஆகிய மாவட்டங்களில் காணாமல் போனவா்கள் மற்றும் அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்த நபா்களின் புகைப்படங்களை குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதள அமைப்பு மூலம் ஒப்பிட்டு பாா்த்து 14 நபா்களை அடையாளம் கண்டுபிடித்துள்ளாா். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் காணாமல் போன 12 இருசக்கர வாகனங்களையும் இதன்மூலம் கண்டறிந்துள்ளாா். இதற்காக, அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிசு மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com