திருநெல்வேலி அருகேயுள்ள வேப்பங்குளத்தில் காவலாளி விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
வேப்பங்குளம், மணிநகா் பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (48). தனியாா் தோட்டத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவா், திங்கள்கிழமை விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது, வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.