திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 15,573ஆக உயா்ந்தது. அதில், மேலும் 4 போ் குணமடைந்ததால் கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 15,294ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 213 போ் உயிரிழந்துள்ள நிலையில், 66 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8,420ஆக உயா்ந்தது. அதில், மேலும் 8 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8,224 ஆக உயா்ந்தது. இதுவரை 158 போ் உயிரிழந்துள்ளனா்; 38 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.