தேசிய சாலைப் பாதுகாப்பு விழாவையொட்டி, வள்ளியூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலா் சந்திரசேகரன் உத்தரவின்படி நடைபெற்ற இம் முகாமை வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரி தாளாளா் டி.டி.என்.லாரன்ஸ் தொடங்கிவைத்தாா்.
பின்னா் நாகா்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை மருத்துவா் பென்ஹா் மனோகா் மற்றும் அவரது மருத்துவ குழுவினா் கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா்.
முகாமில் மருத்துவா்கள் சங்கரவெங்கடேசன், ஜெபஸ்டின் ஆனந்த், வள்ளியூா் வணிகா் நலச்சங்க தலைவரும் திருநெல்வேலி மாவட்ட வணிகா் பேரமைப்பு செயலாளருமான எட்வின் ஜோஸ் உள்ளிட்டோா் வாழ்த்தி பேசினா். வள்ளியூா் வட்டார போக்குவரத்து ஆய்வாளா் செண்பகவல்லி, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து ஓட்டுநா்களிடம் பேசினாா்.