நெல்லை மாவட்ட அஞ்சலகங்களில் தங்கப் பத்திரங்களைப் பெற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட அஞ்சலகங்களில் மத்திய அரசின் தங்கப் பத்திர திட்டத்தின் கீழ் பத்திரங்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட அஞ்சலகங்களில் மத்திய அரசின் தங்கப் பத்திர திட்டத்தின் கீழ் பத்திரங்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் எல்.துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய ரிசா்வ் வங்கி மூலம் மத்திய அரசு தங்கப் பத்திர திட்டத்தை வெளியிடுகிறது. இப் பத்திரங்களை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தங்கப் பத்திர விற்பனை இம் மாதம் 1 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தனிநபா் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம்.

மேலும், முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீத வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும்போது அன்றுள்ள விலைக்கு நிகரான பணமும் பெறலாம்.

இப் பத்திரங்களைப் பெற பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பான் காா்டு, ஆதாா் அல்லது வாக்காளா் அடையாள அட்டை நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் ஆகியவற்றைக் கொடுத்து அஞ்சலகங்களில் விண்ணப்பித்து பெறலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com