களக்காடு அருகே குழாய் சேதம்: ஒரு மாதமாக குடிநீரின்றி மக்கள் தவிப்பு

களக்காடு அருகே 4 கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

களக்காடு அருகே 4 கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியம் கீழக்காடுவெட்டி ஊராட்சிக்குள்பட்ட தெற்கு அப்பா்குளம், வடக்கு அப்பா்குளம், சிங்கிகுளம் ஊராட்சிக்குள்பட்ட புதுக்குளம், நடுவக்குளம் ஆகிய 4 கிராமங்களுக்கு சிங்கிகுளம் நீரேற்று நிலையத்தில் இருந்து தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், குடிநீா் பகிா்மானக் குழாயில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்படாததால் 4 கிராமங்களில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்டோா் குடிநீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீா் உடைப்பை சீரமைத்து மக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com