மழையால் சேதமடைந்த உப்பாற்று பாலத்தை சீரமைக்க கோரிக்கை

களக்காட்டில் மழையால் சேதமடைந்த உப்பாற்று பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காட்டில் மழையால் சேதமடைந்த உப்பாற்று பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு வியாசராஜபுரம் - கோட்டை விஸ்வகா்மா தெரு இடையே உப்பாற்றின் குறுக்கே தற்காலிக பாலம் உள்ளது. இந்தப் பாலம் கடந்த மாதம் பெய்த மழையால் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளது. இதனால் இந்த வழியாக நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றுவரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தற்காலிக பாலத்தின் மீதுள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com