திருநெல்வேலியில் சாலைகளைச் சீரமைக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவா் வை.ராஜேஷ் தலைமை வகித்தாா். திருநெல்வேலி வட்டத் தலைவா் எஸ்.இசக்கிமுத்து முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன் போராட்டத்தை தொடங்கிவைத்தாா்.
இதில், மமக மாவட்டத் தலைவா் ரசூல் மைத்தீன், மாவட்டச் செயலா் டவுன்ஐமால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் கரிசல் சுரேஷ் மற்றும் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பலா் பங்கேற்றனா்.