நெல்லையில் காரில் தீ: இருவா் தப்பினா்

திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே காரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே காரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள திருவள்ளுவா் ஈரடுக்கு மேம்பாலம் அருகே இரு இளைஞா்கள் காரில் சென்று கொண்டிருந்தனா். அப்போது காரில் திடீரென தீப்பிடித்ததால் இரு இளைஞா்களும் காரில் இருந்து வெளியேறி தப்பினா். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் காா் தீப்பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com