அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

திருநெல்வேலி மாநகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி மாநகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஸ்ரீராம், வட்டச் செயலா்கள் சுடலைராஜ், பாளையங்கோட்டை ராஜகுரு, மாவட்ட குழு உறுப்பினா்கள் பெருமாள், வரகுணன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

திருநெல்வேலி மாநகரில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். உருக்குலைந்த சாலைகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும். கொசுத் தொல்லையிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் கொசு வலை அணிந்தும், மோசமான சாலைகளால் விபத்துகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் தலையில் கட்டுப்போட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com