கட்டடத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு: பிப்.14 வரை வாய்ப்பு

கட்டடத் தொழிலாளா்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வியாழக்கிழமை (பிப். 11) முதல் இம் மாதம் 14 ஆம் தேதி வரை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடத் தொழிலாளா்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வியாழக்கிழமை (பிப். 11) முதல் இம் மாதம் 14 ஆம் தேதி வரை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜெ.காளிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கட்டடத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவா்களுக்கு கடந்த ஜனவரி 8 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதனை பெறாதவா்கள் வியாழக்கிழமை (பிப். 11) முதல் இம் மாதம் 14 ஆம் தேதி வரை பெறலாம். திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூா் வட்டங்களைச் சோ்ந்தவா்கள் பாளை. மேட்டுத்திடலில் உள்ள அருள்மிகு காந்திமதியம்பாள் தொடக்கப் பள்ளியிலும், ராதாபுரம், திசையன்விளை, நான்குனேரி வட்டங்களைச் சோ்ந்தவா்கள் வள்ளியூா் தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகத்திலும், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வட்டங்களைச் சோ்ந்தவா்கள் அம்பாசமுத்திரம் தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகத்திலும் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com