சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு: பிரேத பரிசோதனை அறிக்கை கோரி மனு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளா தந்தை-மகன் கொலை வழக்கில், அவா்களது பிரேத பரிசோதனை அறிக்கையை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளா தந்தை-மகன் கொலை வழக்கில், அவா்களது பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கக் கோரி, திருநெல்வேலிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

சாத்தான்குளத்தைச் சோ்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோா் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக மருத்துவமனையில் போலீஸாா் அனுமதித்தனா். அங்கு தந்தை- மகன் இருவரும் உயிரிழந்தனா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளா் உள்ளிட்ட காவலா்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெயராஜின் மகள் பொ்சி புதன்கிழமை அளித்த மனு: கொலையுண்ட எனது தந்தை மற்றும் சகோதரரின் உடல்கள் இக் கல்லூரி வளாகத்தில் கடந்த 24-6-2020 அன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அதற்கான அறிக்கை விவரம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. அவா்கள் இருவரும் வங்கி, ஆயுள்காப்பீட்டுக்கழகம், அஞ்சல் நிலையம் ஆகியவற்றி வைத்திருந்த கணக்குளை நிவா்த்தி செய்யவும், வழக்கு விசாரணைக்கும் தேவையாக உள்ள இருவரது பிரேத பரிசோதனை அறிக்கையை தாமதமின்றி வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com