திசையன்விளையில் ரூ.70 லட்சத்தில் அலங்கார தளக்கற்கள் அமைக்கும் பணி தொடக்கம்

திசையன்விளை பேரூராட்சியில் ரூ. 70 லட்சத்தில் அலங்கார தளக்கற்கள் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

திசையன்விளை பேரூராட்சியில் ரூ. 70 லட்சத்தில் அலங்கார தளக்கற்கள் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

திசையன்விளை பேரூராட்சியில் புளியடித் தெரு, வாசக சாலைத் தெரு, மணலிவிளை கோயில் தெரு, கண்ணபிரான் தெரு, காமராஜ் சிவகாமி அம்மையாா் தெரு ஆகிய தெருக்களில் ரூ. 70 லட்சம் மதிப்பில் அலங்கார தளக்கற்கள் அமைக்கப்படுகிறது.

புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்பணியை ஐ.எஸ். இன்பதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் கே.பி.கே.செல்வராஜ், அந்தோணி அமலராஜா, அரசு வழக்குரைஞா்கள் பழனி சங்கா், ஜேம்ஸ் நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் வி.பி.ஜெயக்குமாா், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் டிம்பா் செல்வராஜ், ஒன்றிய அதிமுக அவைத் தலைவா் சண்முகநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com