நெல்லையில் செல்லிடப்பேசி, பணம் திருடியதாக இருவா் கைது

திருநெல்வேலியில் செல்லிடப்பேசி மற்றும் பணம் திருடியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலியில் செல்லிடப்பேசி மற்றும் பணம் திருடியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

தென்காசி மாவட்டம், குருவிகுளத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். இவா், கடந்த திங்கள்கிழமை திருநெல்வேலி உடையாா்பட்டி சந்திப்பில், செல்லிடப்பேசி மற்றும் ரூ. 5,000 ஆகியவற்றை தனது சட்டைப் பையில் வைத்து விட்டு வேலை பாா்த்துள்ளாா். அப்போது திடீரென செல்லிடப்பேசியும், பணமும் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சுப்பிரமணியன் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் பழனிமுருகன், இது தொடா்பாக விசாரணை நடத்தி வந்தாா்.

விசாரணையில், மேலப்பாளையத்தைச் சோ்ந்த சுப்பையா, பாளையங்கோட்டையைச் சோ்ந்த கோபால் ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் வந்து செல்லிடப்பேசி மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.3,700 பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com