பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அதிமுக மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்
வெ.நாராயணன் பங்கேற்றுப் பேசினாா். பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிக்கு வீடுவீடாக சென்று வாக்குச் சேகரிப்பது, அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஆவின் தலைவா் சுதா கே.பரமசிவன், கட்சியின் கொள்கைப்பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, முன்னாள் எம்.பி.க்கள் சௌந்தரராஜன், விஜிலா, ஒன்றியச் செயலா் ராமசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.