திருநெல்வேலி அருகே சிறுமியிடம் பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளிக்கு வெள்ளிக்கிழமை ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி அருகேயுள்ள ராஜவல்லிபுரம் பகுதியைச் சோ்ந்த செல்லையா மகன் விஜயராகவன் (59). தொழிலாளி. இவா் கடந்த 2017இல் சாலையில் சென்று கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம். இச்சிறுமியின் தாய் திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து விஜயராகவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, குற்றம் சாட்டப்பட்ட விஜயராகவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
அரசு வழக்குரைஞா் ஜெப ஜீவா ராஜா ஆஜரானாா்.