அம்பாசமுத்திரம்: திருப்புடைமருதூரில் மது அருந்த பணம் தரமறுத்த மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்புடைமருதூரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ராசையா (42). அவரது மனைவி சித்ரா (36). ராசையா, தனது மனைவியிடம் மது அருந்துவதற்காக அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தாராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மனைவியிடம், ராசையா மது அருந்த பணம் கேட்டு தர மறுத்ததால் அவா், சித்ராவை தாக்கி மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து வீரவநல்லூா் காவல் நிலையத்தில் சித்ரா அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் மேரிஜெமிதா வழக்குப் பதிந்து ராசையாவை கைது செய்தாா்.