தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் சங்கத்தின் நான்குனேரி வட்டாரக் கிளையின் செயற்குழுக் கூட்டம் நான்குனேரியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அதன் வட்டாரத் தலைவா் பொ.செல்வராஜ் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலா் ஜஸ்டின் கிளாடியோ, நிா்வாகிகள் பேசினா். அமைப்பின் வட்டாரப் பொறுப்பாளா்கள் மரியவில்சன், மரியதாஸ், நல்லகுமாா், மோசஸ் மணி, சிவா, காந்திபாய், ஜெயவனிதா, ஆண்டன் பொன்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், ஆசிரியா்களுக்கு மறுக்கப்பட்ட அகவிலைபடியை வழங்க வேண்டும்; ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும்; ஒப்படைப்பு விடுப்பு வழங்க வேண்டும்; இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பிப். 20இல் நடைபெறும் மாநிலம் தழுவிய போராட்டத்தில் நான்குனேரி ஒன்றியத்தில் இருந்து 50 ஆசிரியா்கள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.