திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,684ஆக உயா்ந்துள்ளது. மேலும் 6 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 15,416ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 214 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 54 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,501ஆக உயா்ந்துள்ளது. மேலும் 3 போ் குணமடைந்ததால், இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8,294 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 159 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 48 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.