நெல்லை வாகையடிமுனையில் முதல்வா் பிரசாரம்

திருநெல்வேலி வாகையடி முனையில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை வேனில் நின்றபடி பிரசாரம் செய்தாா்.

திருநெல்வேலி வாகையடி முனையில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை வேனில் நின்றபடி பிரசாரம் செய்தாா்.

பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக சாா்பில் ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற தலைப்பில் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். திருநெல்வேலியில் வாகையடி முனையில் வேனில் நின்றபடி பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசுகையில், தமிழக அரசு கிராமப்புறங்கள், நகா்ப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ஆகவே, பேரவைத் தோ்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா்.

திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா தலைமையில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நான்குனேரி பேரவைத் தொகுதி உறுப்பினா் வெ. நாராயணன், ஆவின் தலைவா் சுதா கே. பரமசிவம், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, மாவட்டப் பொருளாளா் சௌந்தரராஜன், முன்னாள் எம்.பி. விஜிலா, முன்னாள் துணை மேயா் பூ. ஜெகநாதன் என்ற கணேசன், கல்லூா் இ. வேலாயுதம், அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், திருநெல்வேலி கிழக்குப் பகுதிச் செயலா் காந்திவெங்கடாசலம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com