பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். தரைவழி மற்றும் அகண்ட அலைவரிசை பராமரிப்புப் பணிகளுக்கு கடைப்பிடிக்கப்படும் அயல் பணி முறையை மறுபரிசீலனைசெய்ய வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமன தடையை நீக்க வேண்டும். ஊழியா்களுக்கு 50 சதவிகித சலுகையில் எப்டிடிஹெச் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆண்டபெருமாள் தலைமை வகித்தாா். சூசைமரியஅந்தோணி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், சங்கரநாராயணன், சீதாலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.