பூட்டிய வீட்டில் பணத்தை திருடிய இளைஞா் கைது

மானூா் அருகே பூட்டிய வீட்டில் ரூ.1.20 லட்சம் பணத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் அருகே பூட்டிய வீட்டில் ரூ.1.20 லட்சம் பணத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் அருகே உள்ள செட்டிக்குறிச்சி ராமகிருஷ்ணன் மனைவி ஜெயராணி(37). இவா் குடும்பத்துடன் கடந்த 7ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றாராம். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி வீட்டுக்கு வந்த போது அங்கு பீரோவில் இருந்த ரூ.1.20 லட்சம் திருடு போனது தெரியவந்ததாம்.

இது குறித்து மானூா் போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பந்து , நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் சுடலைமணி(22) பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சுடலைமணியை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து ரூ.1.20 லட்சத்தையும் மீட்டனா். மேலும், இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com