முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் செல்லப்பாண்டியனின் நினைவு நாளையொட்டி வண்ணாா்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் செல்லப்பாண்டியனின் நினைவு நாள் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்திற்காக வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, செல்லப்பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அப்போது தமாகா மாவட்டத் தலைவா் சுத்தமல்லி முருகேசன், அதிமுக மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
காங்கிரஸ் சாா்பில் மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலா் வானமாமலை, மேற்கு மாவட்ட பொருளாளா் முரளிராஜா, மாநகா் மாவட்ட பொருளாளா் ராஜேஷ்முருகன், மகளிரணி மாவட்ட தலைவி அனிஷ்பாத்திமா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பயக18இஏஉககஅ: வண்ணாா்பேட்டையில் உள்ள முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் செல்லப்பாண்டியனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.