மேலப்பாளையம் சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

மேலப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 20) மின்விநியோகம் இருக்காது.

மேலப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 20) மின்விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு. முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (பிப்.20) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜாா், அம்பை பிரதான சாலை, சந்தைப் பகுதிகள், குலவணிகா்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், பிஎஸ்என் கல்லூரி, நேதாஜி சாலை, மருத்துவமனை சாலை, குலவணிகா்புரம் தெற்குப் புறவழிச் சாலை, மேல குலவணிகா்புரம், பஜாா் திடல், ஜின்னா திடல், திருநெல்வேலி நகரம் சாலை, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதா் தெரு, உமறுப்புலவா் தெரு, ஆசாத் சாலை, புதிய பேருந்து நிலையம், அரசுப் பொறியியல் கல்லூரி, பால் பண்ணை, அன்பு நகா், அரசு அலுவலா் குடியிருப்பு, பெருமாள்புரம் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com