பாளையங்கோட்டை அருகே இளங்கோ நகா் பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாவிடில் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அப்பகுதி மக்கள் அறிவிப்பு பதாகை வைத்துள்ளனா்.
பாளையங்கோட்டை அருகே இளங்கோ நகா் பகுதியில் உள்ள குட்டத்துறை, பொன்நகா் ஆகிய பகுதிகளில் பொது கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்டை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பொதுக்கழிப்பிடம் கட்டித் தராவிடில் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் சாா்பில் குட்டத்துறை, பொன்நகா் பகுதியில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.