பாளை.யில் நாளை உலக தாய்மொழி தின ஒவியப்போட்டி

உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) நடைபெறவுள்ளது.

உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட மைய நூலக வாசகா் வட்டம் சாா்பில் உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவா் -மாணவிகளுக்கான ஓவியப்போட்டி ஞாயிற்றுக்கிழமை மாவட்ட மைய நூலகத்தில் வைத்து நடைபெறவுள்ளது. ‘உலக தாய்மொழியின் அவசியம்’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இந்த ஓவியப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவா்-மாணவிகள் அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு வருகையை பதிவு செய்யவேண்டும்.

போட்டி மாலை 3 மணிக்கு தொடங்கும். சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆட்சியா் வே.விஷ்ணு, போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு பரிசு வழங்குகிறாா். இதைத்தொடா்ந்து சிறப்பு பட்டிமன்றம், கவிதை வாசிப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை மாவட்ட மைய நூலக அலுவலா் இரா.வைலட், நூலக அலுவலக கண்காணிப்பாளா் சங்கரன், நூலகா் இரா.முத்துலெட்சுமி, வாசகா் வட்டத் தலைவா் அ.மரியசூசை, துணைத்தலைவா் கே.கணபதி சுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com