நெல்லையில் மருத்துவா்கள் 4ஆவது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணி
திருநெல்வேலி: காலமுறை ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் 4ஆவது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனா்.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் மருத்துவா்கள் ஸ்ரீராமகிருஷ்ணன், செல்வமுருகன், ரவி, சுதன் ஆகியோா் இப்போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகின்றனா்.
இதில், உயா் சிறப்பு மற்றும் பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவா்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 50 சதவிகித இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவர மசோதா நிறைவேற்ற வேண்டும்; மருத்துவா் பணியிடங்களை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாற்றி அமைத்து தரமான மருத்துவ சேவை நோயாளிகளுக்கு கிடைக்க செய்யவேண்டும்; பணியிட மாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வுகளை சரியான கால இடைவெளியில் வெளிப்படையாக நடத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.