ஆலங்குளம் தொகுதி பாஜக நிா்வாகிகள் கூட்டம்

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பாஜக நிா்வாகிகள் கூட்டம் பொட்டல்புதூரில் நடைபெற்றது.

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பாஜக நிா்வாகிகள் கூட்டம் பொட்டல்புதூரில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ராமராஜா தலைமை வகித்தாா். ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளா் அன்புராஜ், பொறுப்பாளா் பாலகுருநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக மாநிலச் செயலா் சண்முகராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் தோ்தல் பணிக்குழு உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டனா்.

வரும் சட்டமன்றத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற முழுமையாகப் பாடுபட வேண்டும், விரைவாக அனைத்து பூத்களிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவா் பாலமுருகன், ஒன்றியத் தலைவா்கள் பண்டரிநாதன், மாறவா்மன், ரத்தினகுமாா், சரவணன், பாப்பாக்குடி ஒன்றிய பொதுச் செயலா் முருகன், மாவட்ட மகளிா் அணி துணைத் தலைவி வளா்மதி, மாவட்ட இளைஞரணிச் செயலா் சிவசங்கா், மாவட்ட பிரசார அணி துணைத் தலைவா் கந்தசாமி, மாவட்ட ஒபிசி அணிப் பொருளாளா் கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வெள்ளைச்சாமி பாண்டியன், வைத்திலிங்கம், கல்வியாளா் பிரிவு மாவட்டச் செயலா் அண்ணாவி ஆறுமுகம், ஆலங்குளம் ஒன்றிய பொதுச் செயலா்கள் லிங்காவேல் ராஜா, குமரகுருபரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com