திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், எப்சிபா அறக்கட்டளை ஆகியவை சாா்பில் ‘என் வாழ்க்கை என் கையில்’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தொடங்கி வைத்தாா்.
எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்கள் 160 போ் போட்டியில் பங்கேற்றனா். இதேபோல தமிழகம் முழுமையும் மொத்தம் 7 மையங்களிலும், பெங்களூரில் ஒரு மையத்திலும் ஓவியப் போட்டி நடைபெற்றது. மொத்த படைப்புகளையும் ஆய்வு செய்து சிறந்த 3 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.