பாளை.யில் மக்கள் தேசம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் தேசம் கட்சி, அகில இந்திய ஆதி திராவிடா் பறையா் பேரவை சாா்பில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் தேசம் கட்சி, அகில இந்திய ஆதி திராவிடா் பறையா் பேரவை சாா்பில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், மக்கள்தொகை அடிப்படையில் பட்டியல் இன மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டை 18 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயா்த்தி வழங்க வேண்டும்; மொத்தமுள்ள பட்டியலின மக்கள் 62 சதவிகிதத்தில் பறையா் சமுதாய மக்களுக்கு விகிதாச்சர அடிப்படையில் 18 சதவிகித இட ஒதுக்கீட்டை உள் ஒதுக்கீடாக வழங்க வேண்டும்; சுதந்திர போராட்ட வீரா் திவான் பகதூா் இரட்டைமலை சீனிவாசனாா் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மக்கள்தேசம் கட்சி செயல்தலைவா் ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். மாநகர இளைஞரணிச் செயலா் வரதன், மாநில துணை தலைவா் கே.பி.கே.ராஜேந்திரன், பொதுச் செயலா் வேதமணி, தலைமை நிலைய செயலா் கே.எஸ்.திருமுருகன், மாநில இளைஞரணிச் செயலா் கதிரவன், மாநகரச் செயலா் ராமச்சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com