வள்ளியூா், துலுக்கா் பட்டியில் 10, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவா், மாணவிகளுக்கு இலவச வினா, விடை புத்தகங்களை ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
ராதாபுரம் தொகுதியில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவா், மாணவிகளுக்கு இலவச வினா, விடை புத்தகங்களை ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ தனது சொந்த செலவில் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கி வருகிறாா்.
இதையடுத்து துலுக்கா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் வள்ளியூா் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் மாணவா்களுக்கு இலவ வினா, விடை புத்தகங்களை எம்.எல்.ஏ. வழங்கிப் பேசினாா். துலுக்கா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இந்நிகழ்ச்சியில், துலுக்கா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை மல்லிகா, அதிமுக வள்ளியூா் நகரச் செயலா் பொன்னரசு, துணைச் செயலா் கல்யாணசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்ற துணைச் செயலா் எட்வா்ட் சிங், வி.எல். கருப்பசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.