மானூா் காவல் நிலைய பகுதியில் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட வந்த இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியாா்பட்டி, முப்பிடாதியம்மன் கோயில் தெரு ராமசுப்பு மகன் ராமேசுவரன் (24). இவா் மீது மானூா் காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. மேலும், சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தாராம். இதையடுத்து அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன், மாவட்ட ஆட்சியா் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தாா். ஆட்சியரின் உத்தரவின்பேரில், ராமேசுவரன் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.