அங்கன்வாடி கட்டடத்துக்கு அடிக்கல்

பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் அங்கன்வாடி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் அங்கன்வாடி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியின் 12 ஆவது வாா்டுக்குள்பட்ட சாந்திநகரில் உள்ள காவலா் குடியிருப்பு பகுதியில் அங்கன்வாடி கட்டடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டிபிஎம். மைதீன்கான் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். இப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில், காவலா் குடியிருப்பு பொதுநலச் சங்கத் தலைவா் சண்முகவேல், முன்னாள் தலைவா் மாடசாமி, இணைச் செயலா் சண்முகசுந்தரம், பிரான்சிஸ், சுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com