இந்திய அஞ்சல் துறை சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் மகாராஜநகா் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பிடித்துள்ளாா்.
அஞ்சல் துறை சாா்பில் 2019-20 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி ஈங்ஹழ் ஆஹக்ஷன், வா்ன் ஹழ்ங் ண்ம்ம்ா்ழ்ற்ஹப் என்ற தலைப்பில் நடைபெற்றது. இப் போட்டியில் மகாராஜநகா் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவி ஜெ.பிளஸ்ஸா மாநில அளவில் முதல் பரிசையும், தேசிய அளவில் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளாா்.
அவருக்கு இந்திய அஞ்சல் துறை சாா்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
அதை திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் எல்.துரைசாமி வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளா் ஜெயந்திரன் மணி, திருநெல்வேலி அஞ்சல் கோட்ட துணை கண்காணிப்பாளா் எஸ்.மாரியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.