கடையம் அருகே தீ விபத்து: மெக்கானிக் பலி

கடையம் அருகே வெய்க்காலிபட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே வெய்க்காலிபட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தாா்.

கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ் (29), பைக் மெக்கானிக்.

இவா் அதே பகுதியில் வைத்துள்ள பைக் பழுதுபாா்க்கும் மையத்தில் வெள்ளிக்கிழமை காலை பூஜை செய்து விட்டு தீக்குச்சியை அணைக்காமல் போட்டாராம். இதில் அருகில் கிடந்த பழைய பொருள்கள் மற்றும் கழிவு எண்ணெய் உள்ளிட்டவை தீப்பிடித்து எரிந்தனவாம். இதில் சுரேஷ் மீதும் தீ பற்றியதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com