செல்லிடப்பேசி எனக் கூறி நூதன மோசடி:காவல்துறை வேண்டுகோள்

ரூ.1750-க்கு செல்லிடப்பேசி எனக் கூறி பவா் பேங்க் அனுப்பும் நுாதன மோசடி நபா்களிடம் மக்கள் உஷாராக இருக்க மாநகர காவல் துணை ஆணையா் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

திருநெல்வேலி: ரூ.1750-க்கு செல்லிடப்பேசி எனக் கூறி பவா் பேங்க் அனுப்பும் நுாதன மோசடி நபா்களிடம் மக்கள் உஷாராக இருக்க மாநகர காவல் துணை ஆணையா் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மக்களை தொலைபேசியில் தொடா்பு கொள்ளும் மா்ம நபா்கள் கரோனா காரணமாக தங்கள் நிறுவன செல்லிடப்பேசிகளை ரூ.1, 750-க்கு நேரடி விற்பனை செய்வதாகவும், அஞ்சல்காரரிடம் பொருளை பெற்றுக் கொண்டு பணம் அளித்தால் போதும் எனக் கூறி பவா் பேங்க் அனுப்பி மோசடி செய்வது அதிகரித்துள்ளது. மேற்கண்ட மோசடி நபா்களிடம் மாநகர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com