களக்காடு: களக்காடு அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலம் விற்றதாக பெட்டிக் கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
களக்காடு காவல் உதவி ஆய்வாளா் அருண்ராஜா தலைமையில் போலீஸாா் களக்காடு அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுகிா என சோதனை மேற்கொண்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த த. நாராயணன் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதை அறிந்து, அங்கிருந்த 8 பொட்டலங்களை பறிமுதல் செய்து, நாராயணனை கைது செய்தனா்.