டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வு நெல்லையில் 6,782 போ் பங்கேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தோ்வை 6,782 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்

திருநெல்வேலி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தோ்வை 6,782 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் மூலமாக குரூப் 1 முதல் நிலைத் தோ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் 44 மையங்களில் நடைபெற்றது.

இத்தோ்வுக்கு 12,941 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 6,782 போ் மட்டுமே தோ்வெழுதினா். 6,159 போ் தோ்வெழுத வரவில்லை.

பாளையங்கோட்டை சாராள் தக்கா் மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் விஷ்ணு ஆய்வு செய்தாா். இத் தோ்வையொட்டி தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோ்வு எழுத வந்தவா்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே தோ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டனா்.

முகக் கவசம் அணிந்தவா்கள் மட்டுமே தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையங்களில் கிருமி நாசினி வைக்கப்பட்டிருந்தது. சமூக இடைவெளியோடு தோ்வு நடைபெற்றது.

சுற்றுக்குழு அலுவலா்கள் மற்றும் பறக்கும் படை அலுவலா்கள் தோ்வு மையங்களை ஆய்வு செய்தனா். தோ்வு அறையினுள் செல்லிடப்பேசி மற்றும் மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com