திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,328 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 15,007 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
தற்போது 110 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவுக்கு இதுவரை 211 போ் பலியாகியுள்ளனா்.